Friday, March 19, 2021

மனிதர்களைக் கொல்லும் மிருகங்கள் Animal That kill Humans

மனிதர்களைக் கொல்லும் மிருகங்கள்.
Animal That kill Humans

மிருகங்கள் எப்பொழுது ஆக்ரோஷமாக மாறும் என யாருக்கும் தெரியாது அந்த வரிசையில் உலகில் அதிக படியான மனிதர்களை கொல்லும் விலங்குகளின் பட்டியலை தலைகீழாக பார்க்கலாம்.

10. சுறா :

சுறா மீன்கள் வருடத்திற்கு 140 மனிதர்களை தாக்குகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் இறப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. அதுவும் இவர்கள் ரத்தத்தை இழந்துதான் இறக்கிறார்கள். பொதுவாகவே மனிதர்களின் மாமிசத்தை சுறாகள் சாப்பிடுவது இல்லை.

9. சிறுத்தை புலி :

சிறுத்தை புலிகள் வருடத்திற்கு 15 பேரை கொள்கின்றன.அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சிறுத்தை புலிகள் கொல்லப்படுகின்றனர். சிறுத்தை புலிகள் தாக்கப்பட்டாலும் மிகவும் ஆக்ரோஷமாக எதிர்த்து தாக்கக்கூடியது.இவை மற்ற மிருகங்களைப் போல தப்பித்து ஓடுவதற்கு முயல்வது இல்லை.

8. குதிரை :

குதிரைகள் மனிதர்களை தாக்குவது இல்லை. ஆனால் குதிரைகளால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட வருடத்தில் 20 பேர் குதிரை பயணத்தின் போதே இறக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக குதிரை பந்தயத்தின் போது தான் அதிகப்படியான மனிதர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

7. மாடு :

மாடுகள் மிகவும் அமைதியான மிருகம்.இருப்பினும் இவற்றிற்கு எதிர்பாராதவிதமாக கோபம் வரும். அந்த நேரங்களில் இவை தனது கூர்மையான கொம்புகளின் மூலம் தாக்கும். இதனால் வருடத்திற்கு 22 பேர் கொல்லப்படுகின்றனர்.

6. எறும்பு :

எறும்புகள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 பேரை கொள்கிறது. அதிகப்படியான வகைகள் இருக்கின்றன.ஆனால் இவற்றில் முக்கால்வாசி எறும்புகள் நமது உடலில் ரசாயனங்களை கடிக்கும்போது செலுத்துகின்றன.

இது மனித உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் மனிதர்கள் இறக்கின்றனர். அதிலும் அதிகமான எண்ணிக்கையில் எறும்புகள் கடித்தால் விரைவாக மரணம் நிகழும்.

5. தேன் பூச்சி :

தேன் பூச்சிகள் தனது கூடுகள் சீண்டபட்டால் குழுவாக சேர்ந்து தாக்கக்கூடியது.இவற்றின் கொடுக்கு அதிகப்படியான விஷத் தன்மை நிறைந்து இருக்கும். இப்படி அதிகப்படியான பூச்சிகள் நம்மை தாக்கும் பொழுது மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 63 பேர் தேன்பூச்சிகள் கடிப்பதால் இறக்கின்றனர்.

4. சிங்கம் :

சிங்கங்கள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 70 பேரை கொல்கின்றன.

அதிலும் குறிப்பாக மரணங்கள் ஆப்பிரிக்காவில் தான் அதிகமாக ஏற்படுகின்றன. பொதுவாக சிங்கங்கள் மனிதர்களை உணவாக சாப்பிடுவது இல்லை. ஆனால் மனிதர்கள் சிங்கத்திற்கு எளிதான குறியாக இருப்பதால் இது நிகழ்கிறது.

3. நாய்கள் :

வீட்டில் வளர்க்கும் நாய்களால் நிறைய மனிதர்கள் இறக்கின்றனர்.

கிட்டத்தட்ட வருடத்திற்கு 100 பேர் மனித நாய்கள் கடித்து இறக்கின்றனர். அதிலும் குறிப்பாக "ரபீஸ்" என்னும் நோய் தொற்று ஏற்படுவதால்தான் இந்த மரணங்கள் நிகழ்கின்றன. எனவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்களிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

2. மான் :

மான்கள் மனிதர்களை அதிகப்படியாக தாக்குகின்றன. அதிலும் குறிப்பாக கொம்பு வைத்த கிளைமானகள் அதிகப்படியாக மனிதர்களை குறிவைத்து தாக்கும். மனிதர்கள் அதிகப்படியாக சாலை ஓரங்களில் நிற்பவர்கள் தான் தாக்கப்படுகின்றன.

1. ஜெல்லி மீன் :

ஜெல்லி மீன்கள்தான் உலகில் அதிகப்படியான மக்களை கொல்கிறது. கிட்டத்தட்ட வருடத்திற்கு 825 மனிதர்களை ஜெல்லி மீன்கள் கொல்லுகின்றன. அதிலும் இவற்றின் விஷம் மிகவும் கொடுமையானது. இதனால் ஏற்படும் வலியை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

பருந்து பற்றிய 10 தகவல்கள் Hawks Facts in tamil

பருந்து பற்றிய 10 தகவல்கள் 
Hawks Facts in tamil


1. பெரிய மற்றும் சிறிய பருந்து : உலகின் மிகப்பெரிய பருந்து இனம் "Ferrogenous" பருந்து.
இதன் ரெக்கைகள் 152 சென்டிமீட்டர் கிட்டத்தட்ட 2.5 கிலோ எடை கொண்டது.
உலகின் மிகசிறிய பருந்து "American kestral"
இதன் இறக்கையின் அளவு 60 சென்டிமீட்டர் மற்றும் உடல் எடை 125 கிராம் மட்டுமே.

2. பருந்துகளின் கண் பார்வை மிகவும் அபாரமானது. கிட்டத்தட்ட மனிதர்களை விட 8 மடங்கு அதனால் தெளிவாக பார்க்க முடியும்.
பருந்துகளால் 100 அடி தொலைவில் இருக்கும் சிறிய உயிரினத்தை கூட தெளிவாக பார்க்க முடியும்.

3. பருந்துகள் காற்றில் வித்தை (Aerobatics)  செய்யும்.எடுத்துக்காட்டாக தலைகீழாக பறக்கும், குட்டிகரணம் அடிக்கும். இதுபோல தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு செய்யமுடியும். பெண் இணையை கவர்வதற்காக காற்றில் சாகசங்கள் செய்கின்றன.

4. பருந்துகளில் பெரிய வகையானது ஒன்றிலிருந்து இரண்டு வரை முட்டைகள் இடும். இவை வளர இரண்டரை மாதங்கள் ஆகும். இதுவே சிறிய பருந்துகள் கிட்டத்தட்ட 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். இவை முழுமையாக வளர ஒரு மாதம் போதுமானது.

5. பருந்துகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் வாழக் கூடியது. இந்த ஜோடியானது மிகவும் அக்கறையுடன் இருக்கும். ஒரு வேளை ஜோடியில் ஏதேனும் ஒன்று இறந்து விட்டால் மட்டுமே வேறு ஒரு துணையை தேடி செல்லும்.

6. பருந்துகளின் காதுகள் மிகவும் துல்லியமாக கேட்ககூடியது. தரையில் ஒரு எலி எழுப்பும் சத்தம் கூட பறக்கும் பருந்துக்கு தெளிவாக கேட்கும்.ஆனால் இவற்றிற்கு நுகரும் திறன் மிகவும் மோசம்.

7. பருந்துகளின் வேகம் : பருந்துகள் மிகவும் வேகமான பறவைகள். இவற்றால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க முடியும். அதிலும் இந்த வேகமானது வேட்டையாடும் நேரத்தில் அதிகரிக்கும். பருந்துகளால் வானத்திலிருந்து செங்குத்தாக தரையை நோக்கி சீரிப்பாய்ந்து வரமுடியும்.இது நிகழும் போது வேகமானது இரட்டிப்பு ஆகும்.

8. பருந்துகளுக்கு மிகவும் பிடித்த உணவுகள் எலிகள், முயல்கள்,  தவளைகள், ஆமைகள், சிறிய வகையான பறவைகள் மற்றும் சில வகை பூச்சிகள்.
இவை சிறிய வகையிலான பாம்புகளையும் விரும்பி சாப்பிடும். ஆனால் தன் உடலை விட பெரியதாக இருக்கும் உயிரினங்களை இவை தாக்குவது இல்லை.

9. பருந்துகளின் நடனம் : பருந்துகள் ஜோடியாக வானத்தில் நடனமாட கூடியது. இந்த நடனத்தின் போது பருந்துகள் ஜோடியாக உயரத்திற்கு பறந்து செல்லும். 
பிறகு ஒன்றை ஒன்று நோக்கி பாய்ந்து வரும்.
அதன் பிறகு இரண்டும் தனது கால் நகங்களை ஒன்றாக கோர்த்து கொள்ளும்.
அதன்பின் வானில் இருந்து கீழ் நோக்கி இரண்டும் மிதந்தபடியே வரும். 
இவற்றை இன சேர்க்கையின் போது இவை செய்யும்.

10. பருந்துகள் கிட்டத்தட்ட 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும்.இதிலும் குறிப்பாக சில வகைகள் 30 வருடங்கள் வரை வாழக்கூடியது. ஆனால் மனிதர்களின் செயல்களால் பருந்துகள் இத்தகைய ஆயுட்காலத்தை பெறுவது இல்லை. 

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏



Saturday, March 13, 2021

நீல திமிங்கிலம் பற்றிய தகவல்கள் Blue Whale facts in tamil | Tamil Facts Top 10

நீல திமிங்கிலம் பற்றிய தகவல்கள் 
Blue Whale facts in tamil



1. நீலத் திமிங்கிலங்கள் அருகில் கப்பல்கள் செல்வதால் ஆபத்தா?
பெரிய படகுகளால் நீலத்திமிங்கலம்களுக்குதான் பிரச்சனை ஏற்படுகிறது. கடலில் இறந்து கரை ஒதுங்கும் நீலத் திமிங்கலங்களில் படகுகளால் இடித்து காயம் ஏற்பட்டு இறந்தவைதான் அதிகம்.இவற்றால் படகுகளை தவிர்க்க முடியாது. காரணம் சரக்கு கப்பல்களை விட நீலத் திமிங்கிலங்கள் மெதுவானவை.

2. நீலத் திமிங்கிலங்களால் மனிதர்களுக்கு ஆபத்தா?
நீலத் திமிங்கலங்களின் தொண்டைப் பகுதி மிகவும் சிறியது.அதனால் ஒரு கூடைப்பந்து அளவில் உள்ள உணவை கூட விழுங்க முடியாது. எனவே இவற்றால் மனிதர்களுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவது இல்லை.

3. நீலத் திமிங்கிலங்கள் பாட்டுப் பாடும்.அவை தனது குட்டிகளுடன் இருக்கும் பொழுதும், இனச்சேர்க்கையின் போதும் பாட்டு பாடும். அதிகபட்சமாக ஒரு நீலத்திமிங்கலம் 6 நிமிடங்கள் வரை பாடி உள்ளது. மனிதனை தவிர பாட்டு பாடகூடிய ஒரே உயிரினம் இவைதான்.

4. நீலத் திமிங்கிலங்கள் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இவை தூங்கும்போது நீந்துவது இல்லை. எனவே அதன் எடை காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கடலின் தரைப்பகுதிக்கு மூழ்கிக் கொண்டே செல்லும். தரைப் பகுதியை தொட்ட உடன் விழித்துக் கொண்டு மீண்டும் நீந்தி மேலே வரும்.

5. நீலத் திமிங்கிலத்தின் உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. எனவே இவற்றால் வருடத்திற்கு 8 மாதங்கள் வரை எந்த ஒரு உணவும் சாப்பிடாமல் உயிர் வாழ முடியும். அதேபோல் உணவு அதிகமாக கிடைக்கும் வேலையில் இவை அதிக அளவில் சாப்பிடும்.

6. உலகின் மிகவும் சத்தமான உயிரினம் நீலத்திமிங்கலம்தான். இவற்றால் கிட்டத்தட்ட 188 டெசிபல் வரை சத்தம் எழுப்ப முடியும். இது ஒரு போர் விமானத்தின் சத்தத்திற்கு ஈடானது.

7. பொதுவாகவே நீலத் திமிங்கிலங்கள் தண்ணீர் குடிப்பது இல்லை. காரணம் இவற்றின் உடம்பிலுள்ள கொழுப்புகள் மூலம் உணவில் இருக்கும் தண்ணீரை இவை பயன்படுத்திக் கொள்ளும்.இந்த கொழுப்பின் காரணமாக நீலத் திமிங்கலத்தின் பாலில் 50 சதவிகிதம் புரதம் உள்ளது.எனவே இவை மனிதர்கள் பயன்படுத்தும் பற்பசை போன்று கெட்டியாக இருக்கும்.

8. அனைத்து மீன் இனங்களும் இடது வலது என வாலினை ஆட்டி நீந்தும்.ஆனால் நீலத்திமிங்கலமாே தனது வாலினை மேல் கீழாக ஆட்டி நீந்தும்.
அதேபோல் உலகில் நீண்ட தூரம் இடம் பெறும் உயிரினம் இவைதான். இவை குளிரான கடல் பகுதியிலிருந்து வெப்பமான கடல் பகுதிக்கு நீந்தி செல்லும்.

9. நீலத் திமிங்கிலங்கள் மனிதர்களைப் போல காற்றை சுவாசிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் இவை காற்றினை சுவாசிக்க கடலின் மேல்புறத்திற்கு வரும். ஆனால் இவற்றால் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை காற்றினை சுவாசிக்காமல் ஆழ்ந்த கடலில் இருக்க முடியும்

10. 1990'களில் நீலத்திமிங்கிலகளின் எண்ணிக்கை பல லட்சமாக இருந்தன. ஆனால் தற்பொழுது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே உலகில் உள்ளன.
எனவே இன்னும் சில வருடங்களில் நாம் நீலத் திமிங்கிலத்தினை அருங்காட்சியகத்தில் மbட்டுமே பார்க்க நேரிடும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏


Tuesday, March 2, 2021

Titanic Facts in tamil | டைட்டானிக் தகவல்கள் | Tamil Facts

Titanic Facts In Tamil | Top 10

டைட்டானிக் பற்றிய 10 தகவல்கள்



1. டைட்டானிக் விபத்தில் சிக்கியதற்கு முக்கிய காரணம் அதில் "பைனாகுலர்" இல்லை. டைட்டானிக் கப்பலில் "பைனாகுலர் அறைக்கான" சாவி யாரிடமும் இல்லை. 
அதன்பிறகு 2010'ல் அந்த சாவி ஏலம் விடப்பட்டு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டது.

2. டைட்டானிக் ஒரு நாளைக்கு 600 டன் நிலக்கரியை பயன்படுத்தி செயல்பட்டுள்ளது.
இதனை தொழிலாளர்கள் கைகளிலேயே எடுத்து கலன்களில் போட்டுள்ளனர். இதற்காகவே கிட்டத்தட்ட 176 தொழிலாளர்கள் கப்பலின் அடிப்பகுதியில் நெருப்பில் வேலை பார்த்துள்ளனர்.

3. டைட்டானிக்கில் மொத்தம் 20 பாதுகாப்பு படகுகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் 1000 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. ஆனால் டைட்டானிக்கில்  பயணம் செய்தவர்கள் மொத்தம் 3000 பேர். மூன்றில் ஒரு மடங்கு மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

4. டைட்டானிக்கில் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் இருந்துள்ளன. டைட்டானிக்கில் கிட்டத்தட்ட 9 நாய்கள் இருந்துள்ளன. அவற்றில் 2 மட்டுமே உயிருடன் காப்பாற்ற பட்டுள்ளது.

5. டைட்டானிக் பனிப்பாறை பார்த்ததற்கும் விபத்து நடந்ததிற்கும் இதையே கிட்டத்தட்ட 37 நொடிகள் மட்டுமே இருந்துள்ளது. இந்தக் குறுகிய நேரத்திற்குள் கப்பலை திருப்ப முடியாமல் விபத்து நடந்துள்ளது.

6. டைட்டானிக்கில் மொத்தம் நான்கு புகைபோக்கிகள் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் மூன்று மட்டுமே செயல்பட்டுள்ளது மற்றொன்று காற்று உள்ளே  வெளியே நுழைய பயன்படுத்தப்பட்டுள்ளது.

7. டைட்டானிக்கில் இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கண்டு பிடிக்கப் படவில்லை. காரணம் டைட்டானிக்கில் பொய்யான பயணச் சீட்டுடன் நிறைய பேர் பயணம் செய்துள்ளனர்.

8. டைட்டானிக் முழுகும் வரை அதில் மின்சாரம் இருந்துள்ளது. காரணம் வேலையாட்கள் இறுதி வரை தங்களின் பணிகளை செய்துள்ளனர். இல்லை என்றால் மின்சாரம் இல்லாமல் மேலும் நிறைய மனிதர்கள் இறக்க வாய்ப்புள்ளது..

9. படத்தில் காட்டியது போல நிஜத்திலும் டைட்டானிக்கில் உள்ள இசைக் கலைஞர்கள் கப்பல் மூழ்கும் வரை இசைகளை இசைத்து பயணிகளை அமைதியாக இருக்க வழி செய்துள்ளனர்.

10. 1898' இல் அதாவது டைட்டானிக் மூழ்கியதற்கு 10 வருடங்களுக்கு முன்பே "ரேத் ஆப் டைட்டன்" என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி புத்தகமும் வெளியிட்டு உள்ளனர். இதில் டைட்டானிக்கை போன்ற மிகப்பெரிய கப்பல் பனிக்கட்டியில் மோதி அழிந்து போனது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளது. நிஜக் கதையை முன்கூட்டியே இந்த ஆசிரியர் எழுதியுள்ளார்.


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

Saturday, February 27, 2021

Vulture facts in tamil | பிணந்தின்னிக் கழுகுகள் பற்றிய 10 தகவல்கள்

Vulture facts in tamil | Top 10

பிணந்தின்னிக் கழுகுகள் பற்றிய 10 தகவல்கள் 



1. பிணந்தின்னிக் கழுகுகள் பிணத்தை மட்டும் உண்பன அல்ல. இவை பெரும்பாலும் பழங்களை விரும்பி சாப்பிடும். எனவே இவற்றை நாம் பழம்தின்னிகழுகுகள் என்றும் கூறலாம். 

2. பிணந்தின்னிக் கழுகுகள் தங்களின் மேலே சிறுநீர் கழித்துக் கொள்ளும். காரணம் இவற்றின் வெப்பமான உடலை குளிர்விக்கும் கிருமிகள் தொற்று ஏற்படாமல் தடுக்கவும். 

3. உலகின் மிகப்பெரிய பிணந்தின்னிக் கழுகு "எண்டியன் காண்டூர்". இவற்றின் உயரம் நீளம் 10 அடி இவற்றின் எடை 15 கிலோ .

4. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு மாமிசத்தை விட எலும்புகள் தான் மிகவும் பிடிக்கும். இவை எலும்புகளை முழுதாக முழுங்கி சாப்பிடும்.

5. பிணந்தின்னிக் கழுகுகள் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன. இந்தப் பறவை இல்லையென்றால் நோய்கள் பரவி உலகம் அழிந்துவிடும்.

6. பிணந்தின்னிக் கழுகுகள் இறக்கப்போகும் விலங்குகளை சுற்றி பறக்காது. காரணம் இதற்கு அதிகமாக சக்திகளை இழக்க நேரிடும். எனவே இவை இறந்த இறந்த பிராணிகளை சுற்றிதான் பறக்கும். 

7. பிணந்தின்னிக் கழுகுகளை நோய்கள் தாக்குவது இல்லை. காரணம் இவற்றின் கழுத்துப்பகுதியில் ரோமங்கள் இருக்காது. ஏனென்றால் ரோமத்தில் பிணங்களின் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல் இவற்றின் சிறுநீரில் சிறுநீரில் ரசாயனங்கள் அதிகமாக உள்ளன. இவற்றின் மூலம் கிருமிகளை அழித்துவிடும்.

8. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு வலுவான கால்கள் இல்லை. அதேபோல் கால் நகமும் வலுவானதாக கூர்மையாக இருக்காது. எனவே இவற்றால் இறந்த சடலங்களை சாப்பிட இயலாது. அதனால் வேறு பெரிய மிருகங்கள் இந்த சடலங்களை கடித்து குதறும் வரை இவை அருகிலேயே காத்திருக்கும்.

9. பிணந்தின்னிக் கழுகுகள் இறந்த மிருகங்களைத் தவிர தானாகவே வேட்டையும் ஆடும். சிறிய வகை பறவைகள், சிறிய உயிரினங்கள் போன்றவற்றை இவை வேட்டையாடி சாப்பிடும்  

10. பிணந்தின்னிக் கழுகுகள் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து நேரும் என்றால் சாப்பிட்டதை கக்கி விட்டு பறந்துவிடும். அதேபோல் உணவில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் என்றால் அந்த உணவினை கக்கிவிடும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏






Wednesday, February 24, 2021

Animals that can kill lion | Lion tamil

Animals which can kill a lion (Top 10)

சிங்கத்தை கொல்லக்கூடிய 10 விலங்குகள் 


1. யானை
யானையானது சுலபமாக ஒரு காரை கவிழ்த்துப்போட்டுவிடும். யானையால் சிங்கத்தை எளிமையாக கொல்ல முடியும். ஆனால் அதற்கு சிங்கம் யானையின் துதிக்கையில் சிக்க வேண்டும்.

2. காண்டாமிருகம்
காண்டாமிருகத்தின் தோல் மிகவும் கடினமானது. 
அவற்றின் கொம்புகள் மிகவும் கூர்மையாகவும் வலுவானதாகவும் இருக்கும். இவற்றால் சிங்கத்தை எளிமையாக கொல்ல முடியும்.

3. நீர்யானை
நீர்யானை மிகவும் ஆக்ரோஷமான மிருகம். 
இவை எப்பொழுதும் மற்ற விலங்குகளை தாக்குவதற்கு தயாராக இருக்கும். நீர்யானையின் மிகச்சிறந்த ஆயுதங்கள் அவற்றின் பற்கள். அதேபோல் அகண்ட வாய் பகுதி உள்ளதால் கடி வலிமை அதிகமாக இருக்கும்.

4. ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகச்சிவிங்கியின் ஆயுதம் அதன் வலிமையான கால்கள். ஒட்டகச்சிவிங்கி ஒரே முறை உதைத்தால் போதும் சிங்கத்தின் முகம் சிதைந்து விடும். ஆனால் இதற்கு சரியான நேரம் தேவை. இல்லையென்றால் சிங்கம் ஒட்டகச்சிவிங்கியை கொன்றுவிடும்.

5. நெருப்புக்கோழி
நெருப்புக்கோழியின் கால் மிகவும் வலிமையானது. அதில் கூர்மையான நகங்கள் இருக்கும். நெருப்புக்கோழி முட்டையினை பாதுகாக்க ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தும். இந்த நேரங்களில் சிங்கத்தால் நெருப்புக்கோழிகளிடம்  ஈடு கொடுக்க முடியாது.

6. பனிக்கரடி
சிங்கங்களும் பனிகரடிகளும் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றன. எனினும் பனிகரடிகளால் சிங்கங்களை கொல்ல முடியும். காரணம் பனிக்கரடியின் உடல் எடை அதிகமாக இருக்கும். கால்களில் பலம் அதிகமாகவும், கூரிய நகங்களும் இருக்கும்.

7. புலி 
சிங்கத்திற்கு இணையான மிருகம் புலியாகும். இவை இரண்டும் உடல் எடை முதல் அனைத்து விஷயங்களிலும் சமமாக இருக்கும். எனவே இந்த இரண்டு மிருகங்களும் மோதும் பொழுது வெற்றிபெறும் வாய்ப்பு இரண்டு பேருக்கும் 50% உண்டு.

8. முதலை
முதலை தண்ணீருக்கு ராஜாவாகும். சிங்கத்தால் தண்ணீரில் முதலையை எதிர்த்து போட்டியிட முடியாது. முதலையின் பற்களும் தாடைகளும் சிங்கத்திற்கு எமனாக அமைந்துவிடும்.

9. காட்டு எருமை
 சிங்கத்திற்கு மிகவும் பிடித்த உணவு காட்டெருமை. ஒரு காட்டெருமையை கொன்றால் சிங்க கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு உணவு தேவை இல்லை. ஆனால் ஒரு சிங்கத்தால் தனியாக நின்று ஒரு காட்டெருமையை கொல்ல இயலாது. காட்டெருமையின் கொம்புகளும், அவற்றின் மிகப்பெரிய உடம்பும் சிங்கத்தால் ஈடு கொடுக்க முடியாது.

10. மனிதன்
சிங்கத்தை மட்டுமல்லாமல் அனைத்து மிருகங்களையும் கொல்லும் ஒரு உயிரினம் மனிதன். மனிதனால் பல உயிரினங்கள் அழிந்து விட்டன. அழியும் தருவாயில் பல விலங்குகள் சென்றுவிட்டன.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு  செய்யவும். 
நன்றி.🙏


Tuesday, February 23, 2021

Eagle facts in tamil | கழுகு பற்றிய தகவல்கள் | Top 10 Tamil

Eagle Facts in tamil | Top 10

கழுகு பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள் 



1. நாம் படங்களில் கேட்கும் கழுகின் குரலானது மிகவும் கம்பீரமாக இருக்கும். ஆனால் நிதர்சனத்தில் கழுகுகளின் குரலானது மிகவும் மோசமாகவே இருக்கும். ஆனால் "ரேட் டேய்ல்டு  கழுகு" என்ற கழுகு மிகவும் கம்பீரமான குரல் உள்ளது.

2. நெதர்லாந்து நாட்டில் போலீஸ் பிரிவினர் கழுகுகளுக்கு ஆளில்லாத ட்ரோன் விமானங்களை கண்டுபிடித்து தாக்குவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கழுகுகளை மட்டும் கொண்ட போலீஸ் அமைப்பும் உள்ளது.

3. கழுகுகள் மிகவும் காதல் பாசம் கொண்டது. புறாக்களை போல் கழுகுகளும் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு துணைக்கு மட்டுமே ஜோடியாக இருக்கும்.
ஒரு வேளை அந்த ஜோடி ஆனது இறந்துவிட்டால் மட்டுமே அடுத்த இணையை தேடும்.

4. உலகில் அதிக அளவில் எடை தூக்ககூடிய பறவைகள் முதல் இடம் அருகே உள்ளது அதிலும் குறிப்பாக "மார்ஷியல் கழுகு" வகைகள் தன் உடலை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக் கொண்டு பறக்க கூடியது. இது மலை ஆடுகளை தூக்கி சென்று உள்ளது.

5. கழுகுகள் தாங்கள் இருக்கும் இடத்தினை வேறு யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது. பெரும்பாலான கழுகுகள் ஒரே இடத்தில் தான் மீண்டும் மீண்டும் முட்டையிட்டு அடைகாக்கும். ஆனால் பனி பிரதேசங்களில் மட்டும் கழுகுகள் அடிக்கடி இடம் பெயர்ந்து போவது போகும். ஆனால் பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தன் கூட்டிற்கு வந்து விடும்.

6. முட்டையிட்ட பின் ஆண் பெண் கழுகுகளும் ஏதேனும் ஒன்று எந்நேரமும் தனது கூட்டின் மேல் பார்வையைச் செலுத்திக் கொண்டே இருக்கும். இரண்டு கழுகுகளும் தன் கூட்டினை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை.

7. கழுகுகளில் பொதுவாக பெண் கழுகுகள்தான் முட்டையை அடைகாக்கும். ஆண்கள் பெண்களுக்குத் தேவையான உணவினை தினமும் கொண்டு வந்து கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.

8. கழுகுகள் பொதுவாக தங்கள் கூட்டினை மிகவும் பெரியதாக கட்டும் பழக்கம் உடையது.
இதில் "பால்டு கழுகு" கிட்டத்தட்ட எட்டு அடி வரை கூட கூடுகட்டும். சில நேரங்களில் கூடுகளின் எடை தாங்காமல் மரக்கிளைகளே உடைந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

9. கழுகுகளில் மிகவும் அரிதான கழுகு வகை "செற்பெண்ட் ஈகிள்" ஆகும் இந்த கழுகுகள் அதிகமாக பாம்புகளையே விரும்பி சாப்பிடும்.
இது அழியும் தருவாயில் உள்ளது.

10. கழுகுகள் மிகவும் சந்தர்ப்பவாதி. 
ஒரு விலங்கு தன் இறையை கொல்லும், அதுவரை கழுகுகள் காத்திருக்கும் உணவை கொன்ற பின்பே சுலபமாக திருட முடியும் என்றால் மட்டும் அந்த உணவினை தாக்கி அழித்துக் கொள்ளும் அதே போல் உணவு எங்கே கிடைத்தாலும் அதனை அபகரிக்க தயார் நிலையில் கழுகுகள் இருக்கும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏